உள்ளூர் செய்திகள்
தடுப்பு கட்டையில் மோதிய பஸ் சாலையில் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

தடுப்பு கட்டையில் மோதி பஸ் கவிழ்ந்தது

Published On 2022-04-11 15:01 IST   |   Update On 2022-04-11 15:01:00 IST
கடலூர்-புதுவை சாலையில் தடுப்பு கட்டையில் மோதி பஸ் கவிழ்ந்தது
புதுச்சேரி:

புதுவையிலிருந்து கடலூருக்கு   தமிழக அரசு பஸ் சென்று கொண்டிருதது. 

கன்னியகோவில் அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ்  எதிர் பாராதவிதமாக சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. 

இதில் டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்கு-வரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்கு-வரத்தை சரி செய்யதனர்.

மேலும் தடுப்புக் கட்டைகளை கிரேன் மூலம் அகற்றினர். மேலும் ராட்சத கிரேன்கள் மூலம் கவிழ்ந்த பஸ்சை அப்புறப்படுத்தினர். 

கன்னியகோவில் பகுதியில் சாலைக்கு நடுவில் தடுப்புகட்டை அமைக்கப் பட்டுள்ளது. இந்த தடுப்பு கட்டையில் பிரதிபலிப்பான்? எச்சரிக்கை பலகை மற்றும் அப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினார்.
இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Similar News