உள்ளூர் செய்திகள்
திராவிடர் மாணவர்கள் கழகம் ஆர்பாட்டம்
திராவிடர் மாணவர்கள் கழகம் ஆர்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
திராவிடர் மாணவர் கழகம் சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை வகித்தார்.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார். மாணவர்கள் கழக நிர்வாகிகள் பண்பாளன், பிரபாகரன், இலக்கியா, இனியன், ரேவந்த்அண்டனி, சுபாஷ், கிருஷ்ணபாண்டி, மணிகண்டன், மாரிமுத்து, பிரகாஷ், ராமராஜ், சிவராஜ், திராவிடபுகழ், உன்னிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், தி.மு.க. மாணவரணி மணிமாறன், திராவிடர் கழக தலைவர் சிவவீரமணி, பிரவீன்குமார், எழிலன், தமிழ்வாணன் கண்டன உரையாற்றினர். மணிபாரதி நன்றி கூறினார்.
மத்திய பல்கலைக்-கழகங்களில் கட்டாய நுழைவுத்தேர்வு, முனைவர் பட்ட மாணவர்-களை தேர்ந்-தெடுக்கும் உரிமை பறிப்புக்காக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.