உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திடீரென கோஷமிட்டனர்.

வட மாநிலத்தவர்களுக்கு உள்நுழைவு அனுமதி சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு

Published On 2022-04-11 14:19 IST   |   Update On 2022-04-11 14:19:00 IST
தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு உள்நுழைவு அனுமதி சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ஈரோடு:

தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு உள்நுழைவு அனுமதி சீட்டு முறையை அமல்படுத்த  வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில்  மனு கொடுத்தனர்.

ஈரோடு கலெக்டர் அலு வலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது. 
அப்போது தமிழக வாழ்வு ரிமை கட்சி ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் கோபு தலைமையில் நிர்வாகிகள் வெளியேற்று, வெளியேற்று வடமாநிலத்தவர்கள் வெளியேற்று, தாக்காதே, தாக்காதே காவல்துறையினரை தாக்காதே என்று கோஷம் எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகம் வந்தனர். 
இதனால்  கலெக்டர் அலு வலகத்தில் பரபரப்பு நிலவி யது. பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத் தனர்.
அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பு பொருளா தாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வரும் வட மாநிலத்தவர்களால் குற்றங்கள் அதிகரித்து வருவதை தமிழக வாழ்வு ரிமை கட்சியினர் பலமுறை சுட்டிக்காட்டி உள்ளோம்.
இதன் தொடர்ச்சியாக மொடக்குறிச்சியில் வட மாநில இளைஞர்கள் காவல் துறையினரை கடுமையாக தாக்கி உள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. எனவே தமிழ்நாட்டிற்குள் பணிக்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கையை கட்டுப் படுத்தவும், கண்காணிக்கவும் உள்நுழைவு அனுமதி சீட்டு முறையை நடைமுறை ப்படுத்த வேண்டும்.
இதற்காக நடப்பு சட்ட மன்றக் கூட்டத் தொடரி லேயே தனி சட்டம் இயற்ற வேண்டும். இதேபோல் வட மாநிலத்தவர்கள் கண் காணிக்க போலீசார்  தனிப் பிரிவை ஏற்படுத்த வேண் டும். குற்ற சம்பவங்களில் ஈடுபடும் வட மாநிலத்தவர் களை உடனடியாக தமிழ் நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
ஈரோட்டில் உள்ள தொழிற் சாலைகளில் அதிக அளவில் வேலை பார்க்கும் வட மாநிலத்தவர்களை அந்தந்த தொழிற்சாலைகள் உடனடியாக திரும்பி அனுப்ப வேண்டும். இல்லை யென்றால் வடமாநிலத் தவர்கள் அதிகமாக பணி புரியும் தனியார் தொழிற் சாலை முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
இதில் வடக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கவேல், ஜார்ஜ் பெர் னாண்டஸ், மாவட்ட துணைத் தலைவர் வினோத் குமார், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் தர்ம ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Similar News