உள்ளூர் செய்திகள்
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
திருமணம் ஆகாத ஏக்கத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
திருமணம் ஆகாத ஏக்கத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு சென்னிமலை ரோடு பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாலன் (58). இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை.
மேலும் சரியான வேலை அமையவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த அவர் தினமும் மது குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாலன் வீட்டில் இருந்த எலி பேஸ்ட் (விஷம்) குடித்து விட்டார்.
இது குறித்து அவர் வீட்டில் இருந்தவர் களிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.