உள்ளூர் செய்திகள்
பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்.

காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

Published On 2022-04-11 08:12 GMT   |   Update On 2022-04-11 08:12 GMT
நாகை அருகே கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் மகா காளி-யம்மன் கோவில் பங்குனி பெருவிழா கடந்த 5-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. திருவிழாவின் முக்கிய

 நிகழ்ச்சியான பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. சேவாபாரதி விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்ட முளைப்பாரி மற்றும் பால்குட ஊர்வலத்--தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள்

மஞ்சள் ஆடையுடன் முளைப்பாரி கரகம் எடுத்தும், பால் குடங்களை சுமந்தவாறும் ஊர்வலமாக சென்றனர். அப்போது செண்டை மேளம் முழங்க, காளி நடனம் மற்றும் கரகாட்ட நிகழ்ச்சிகள்

அங்கு களைகட்டியது. பின்னர் ஊர்வலமானது கீச்சாங்குப்பம் காளியம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கே அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை

நிறைவேற்றினர். முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நாளை மாலை நடைபெறு-கிறது. இதில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 64 மீனவ கிராம மக்கள்

பூக்குழி இறங்குகின்றனர்.
Tags:    

Similar News