உள்ளூர் செய்திகள்
பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
ஈரோடு:
பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப்-பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.
மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப் பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவ-ரப்-படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.28 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 106 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்-திற்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி பாசனத்திற்கு 5 கனஅடியும் என மொத்தம் 705 கனஅடி தண்ணீர் வெளி-யேற்றப்பட்டு வருகிறது.