உள்ளூர் செய்திகள்
பலியான ரகுராமன்.

மின்சாரம் தாக்கி மாணவன் பலி

Published On 2022-04-11 13:28 IST   |   Update On 2022-04-11 13:28:00 IST
திருமருகல் அருகே மின்சாரம் தாக்கியதில் பள்ளி மாணவன் உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டா-ரவடை ஊராட்சி மதகடித்-தெருவை சேர்ந்தவர்கள் கஜேந்திரன், சங்கீதா தம்பதியினர். இவர்களின் மகன் ரகுராமன் (வயது 15). இவர்

அடியக்கமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9&ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு 9.30 மணி அளவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கஜேந்திரன், சங்கீதா,

ரகுராமன் அனைவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது ரகுராமன் சிறுநீர் கழிக்க வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். 10 மணி வரை வீட்டிற்கு திரும்-பாததால் சங்கீதா, கஜேந்திரன்

இருவரும் ரகுராமனை தேடினர்.அப்போது வீட்டில் இருந்து ஆடு கொட்டகைக்கு செல்லும் மின் வயர் காற்றில் அறுந்து கிடந்துள்ளது. அதனை அறியாமல் மிதித்த ரகுராமன் மின்சாரம்

தாக்கி மயங்கிக் கிடந்துள்ளார். அவரை அவரது பெற்றோர் மீட்டு மோட்டார் சைக்கிளில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

அங்கு ரகுராமனை பரி சோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளனர். தகவலின்பேரில் திட்டச்சேரி போலீசார் ரகுராமனின் உடலை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி

மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News