உள்ளூர் செய்திகள்
மழை

கனமழை எதிரொலி- காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2022-04-11 09:11 IST   |   Update On 2022-04-11 09:11:00 IST
கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புவரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
காரைக்கால்:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டம், காரைக்கால் மற்றும் கடலோர பகுதிகளில் பரவலாக பலத்தமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அதன்படி நேற்று அதிகாலை முதல் கடலூர் மற்றும் காரைக்கால் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி, டி.ஆர்.பட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியது.

இன்று காலையும் மழை பெய்தபடி இருந்தது. இதனால் காரைக்கால் மாவட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புவரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட கலெக்டர் வல்லபன் தெரிவித்துள்ளார்.

Similar News