உள்ளூர் செய்திகள்
சூளகிரியில் பள்ளி மாணவி மாயமானார்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் கடந்த 7ந்தேதி அன்று கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவியின் பெற்றோர் சூளகிரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.