உள்ளூர் செய்திகள்
கொள்ளை

நெசப்பாக்கத்தில் மளிகை கடையை உடைத்து கொள்ளை

Published On 2022-04-10 06:29 GMT   |   Update On 2022-04-10 06:29 GMT
நெசப்பாக்கத்தில் மளிகை கடையை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

சென்னை நெசப்பாக்கம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். காலையில் கடை திறக்க வந்தபோது ‌ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு ராமசாமி அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்து இருந்த ரூ38ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் சுருட்டி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News