உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

Published On 2022-04-10 06:13 GMT   |   Update On 2022-04-10 06:13 GMT
கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கூடலூர்:

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருகிறது.

கொரோனா ஊரடங்குக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பெய்த கன மழையால் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

 இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

மேலும் அருவியில் குளித்துக்-கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை  அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர். நீர்வரத்து சீரான பின்பு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News