உள்ளூர் செய்திகள்
.

தேன்கனிக்கோட்டை அருகே சாலையை கடந்து சென்ற யானைகள் கூட்டம்

Published On 2022-04-09 17:21 IST   |   Update On 2022-04-09 17:21:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சாலையை யானைகள் கூட்டம் கடந்து சென்றது.
தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட் டை அருகே உள்ள   மரகட்டா காப்பு காட்டில் 10 யானைகள் முகாமிட் டுள்ளன. அவற்றில் 5 யானைகள் கூட்டத்தில இருந்து பிரிந்து அஞ்செட்டி சாலையை கடந்து சென்றது . இதை பார்த்த வாகன ஒட்டிகள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விட் டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனதுறையில் விரைந்து வந்து தாரை, தப்பட்டை அடித்தும் அதிக ஒலியை எழுப்பியும் நீண்ட நேரம் போராடி தாவரக் கரை வனப் பகுதிக்குள் விரட்டி சென்றனர். இதனால் வாகன ஒட்டிகள் பெருமூச்சு விட்டு வாகனங்களில் சாலை யை கடந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

Similar News