உள்ளூர் செய்திகள்
.

10ம் வகுப்பு மாணவி 2 மாதம் கர்ப்பம் வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2022-04-09 15:38 IST   |   Update On 2022-04-09 15:38:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை 2 மாத கர்ப்பிணியாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர், 

ஓசூர் அருகே உள்ள அக்கொண்டப்பள்ளியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 20). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரும் 16 வயதுடைய சிறுமி ஒருவரும் உறவினர்கள் ஆவார். அந்த சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் வாலிபர் சிதம்பரம் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, உல்லாசமாக இருந்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். தற்போது 2 மாத கர்ப்பிணியாக அந்த சிறுமி உள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை வலைவீசி தேடி வருகிறார். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News