உள்ளூர் செய்திகள்
குடும்ப தகராறில் மீனவர் தற்கொலை
கீழையூர் அருகே குடும்ப தகராறில் மீனவர் தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் செருதூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). மீனவர். இவருக்கும், இவரது மனைவிக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த கீழையூர் போலீசார் சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.