உள்ளூர் செய்திகள்
உட்கட்சி தேர்தல் குறித்து ஓம்சக்தி சேகர் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2022-04-08 15:38 IST   |   Update On 2022-04-08 15:38:00 IST
ஓம்சக்தி சேகர் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
புதுச்சேரி:

அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் புதுவையில் வருகிற 23 மற்றும் 24-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. அமைப்பு தேர்தல் சம்பந்தமாக மேற்கு மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் லெனின் வீதி மேற்கு மாநில அ.தி.மு.க. அலுவலகத்தில் நடை-பெற்றது.

மாநில அவைத் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் மாநில இணை செயலாளர்கள் காசிநாதன், மகாதேவி, மாநில துணை தலைவர் ஆனந்தன், மாநில துணை செயலாளர்கள் நாகமணி, சதாசிவம், கணேசன், மாநில பொருளாளர் சங்கர் மற்றும் தொகுதி செயலாளர்கள் வெங்கடேசன், பொன்னு சாமி, சேகர், கோபால், இருசப்பன், கமல்தாஸ், தீனதயாளன், ஆனந்தன், வேலவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த வரலாற்று சிறப்பு மிக்க 7.5 இட ஒதுக்கீடு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து இருப்பது அ.தி.மு.க.விற்கு கிடைத்த மிக பெரிய வெற்றி. 

இந்த சட்டத்தை கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமியை குழு பாராட்டி போற்று கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News