உள்ளூர் செய்திகள்
நாகை மாவட்டம் எரவாஞ்சேரியில் கட்டுமான பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தினையும், அதனைத்தொடர்ந்து பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளையும் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஊராட்சி பகுதியில் அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், பணிகளை துவங்காமல் இருக்கும் பயனாளிகளை உடனடியாக துவங்க வைக்கவும் அறிவுறுத்தினார்.
மேலும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், ஊராட்சி பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்தி 100 நாள் வேலையை உடனே தொடங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆய்வின்-போது எரவாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தினையும், அதனைத்தொடர்ந்து பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளையும் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஊராட்சி பகுதியில் அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், பணிகளை துவங்காமல் இருக்கும் பயனாளிகளை உடனடியாக துவங்க வைக்கவும் அறிவுறுத்தினார்.
மேலும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், ஊராட்சி பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்தி 100 நாள் வேலையை உடனே தொடங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆய்வின்-போது எரவாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.