உள்ளூர் செய்திகள்
கடத்தலில் ஈடுபட்டவர்கள்.

ரூ.25 லட்சம் மதிப்பு கஞ்சா மூட்டைகள் பறிமுதல் - 3 பேர் கைது

Published On 2022-04-08 13:05 IST   |   Update On 2022-04-08 13:05:00 IST
வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை யில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 25 லட்சம் மதிப்புள்ள ஒன்பது மூட்டையில்

இருந்த 270 கிலோ கஞ்சா மினிவேனுடன் பறிமுதல் செய்யபட்டது.

வேதாரண்யம் கடலோர காவல் குழும  டி.எஸ்.பி குமார் ,இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆறுகாட்டுத்துறைக்கு ஒரு வேனில் கீற்று ஏற்றி கொண்டு  வேகமாக செனறு ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் நின்றுகொண்டிருந்தது.

சந்தேகம் அடைந்த போலீசார் விடமால் தூரத்தி சென்று சோதனையிட்டதில்  கீற்றுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 9 சாக்கு மூட்டைகளில் 270 கஞ்சா இருந்தது  தெரிய வந்தது.

மறைத்து வைத்து இருந்த கஞ்சா மூட்டைகளையும் கடத்த-லுக்கு பயன்படுத்திய மினி-வேனையும் அதன் ஓட்டுனர் சுரேசையும் கைது செய்து வேதாரண்யம் கடலோர காவல் நிலையம்

கொண்டு வந்து விசாரணை செய்தனர். போலீஸ் விசாரணையில் கைப்பற்ற கஞ்சாவின் மதிப்பு சுமார் 25 லட்சம் எனவும் ஆறுகாட்டுத்துறை யிலிருந்து படகு

மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் டிரைவர் சுரேசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில்  கஞ்சா கடத்தலில் ஆறு-காட்டுத்-துறையை சேர்ந்த பாரதிதாசன் இலங்கை நாட்டை சேர்ந்த காந்த-ரூபன் ஈடுபட்டு

இருந்தது தெரிய வந்தது உடன் போலீசார் ஆறுகாட்டுத்துறைக்கு சென்று பாரதிதாசன் மற்றும் அவரது வீட்டில் ஈரோடு அகதிகள் முகாமில் இருந்து வந்துதங்கி இருந்த இலங்கையை

சேர்ந்த காந்தரூபன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Similar News