உள்ளூர் செய்திகள்
பார்வையற்ற மாற்றுத்திறன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் :
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த வாலாந்தூர் காலனியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம் (வயது 38). கூலித்தொழிலாளி.
இவர், அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதான பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னம் பலத்தை கைது செய்தனர்.