உள்ளூர் செய்திகள்
.

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி முகாம்

Published On 2022-04-07 16:11 IST   |   Update On 2022-04-07 16:11:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
ராயக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 28 ஊராட்சிகளும் ஒவ்வொரு ஊராட்சிக்கு 6 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு நேற்று முதல் ஒரு வாரத்துக்கு பயிற்ச்சிகள் வழங் கப்படுகிறது. 

 முகாமில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி குழு கூட்டமைப்பு, வறுமை ஒழிப்பு சங்கம், உழவர் உற்பத்தியாளர் குழு, சமுதாய வள பயிற்றுனர் குழு உள்ளிட்டவற்றுக்கு அரசு திட்டங்களை எவ்வாறு செயல் படுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)கல்யாணசுந்தரம் மேற் பார்வையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோ.தமிழரசன், டி.ராமச்சந்திரன் முன்னிலையில் மாவட்ட அளவிலான பயிற்றுனர்கள் கௌதமி, லோகநாதன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இதில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு பயிற்சி கையேடு மற்றும் உபகரணங்கள் அடங்கிய பேக் வழங் கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசமூர்த்தி, சீனிவாசராவ், மதியரசி, வளமைய அலுவலர் நிகோல பிரகாஷ் ஆகி யோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Similar News