உள்ளூர் செய்திகள்
சடைச்சிமுத்து காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சங்கமங்கலம் சடைச்சி முத்து காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் சிக்கல் அடுத்துள்ள சங்கமங்கலத்தில் சடைச்சிமுத்து காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபி-ஷேகம் விழா கணபதிஹோ-மத்துடன் துவங்கியது. அதனைத்-தொடர்ந்து நான்கு கால யாக சாலை பூஜைக-ளுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.
இதையடுத்து ராமநாத சிவாச்சாரியார் தலை-மையில் மேளதா-ளங்கள் முழங்க, கடம் புறப்பாடுநடை-பெற்றது. இனைத் தொடர்ந்து சிவாச்சா-ரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்--தில் புனித நீர் ஊற்றப்--பட்டு கும்பாபிஷேகம் நடை-பெற்-றது. அப்போது புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
அதனை-தொடர்ந்து சடைச்சிமுத்து காளியம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று மன-முருகி வழிபட்டனர்.