உள்ளூர் செய்திகள்
சொர்ணபுரீஸ்வரர் மீது சூரிய ஒளி வீசும் அற்புத நிகழ்வு நடந்தது.

சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சிவ சூரிய வழிபாடு

Published On 2022-04-07 14:58 IST   |   Update On 2022-04-07 14:58:00 IST
சீர்காழி அருகே சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சிவ சூரிய வழிபாடு நடந்தது.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் சொர்ணபுரம் ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் இன்று காலை சிவ சூரிய பூஜை வழிபாடானது நடந்தது. காலை சூரிய பகவான் ஈசனை முழுவதும் ஆட்-கொண்ட திருக்காட்சி வைபவம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்ணபுரீஸ்வரர் பகவானின் அருளை-யும் சூரிய பகவானின் அரு-ளையும் பெற்றனர். இக்-காட்சி நாளை வெள்ளிக்-கிழமை காலை 6 மணி அள-வில் மற்றும் சனிக்-கிழமை காலை 6 மணி அளவில் மீண்டும் தெரியும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பக்தர்கள் சிவ சூரிய வழிபாட்டு திருவிழாவில் கலந்து கொண்டு இறைவன--னின் பரிபூரண அருளைப் பெற கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த சூரிய வழிபாட்டினை கண்டால் சூரிய கிரக தோஷம் நீங்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம். 

வருடத்தில் பங்குனி மாதத்தில் மூன்று முறை மட்டுமே சூரியன், ஈசனை இவ்வாலயத்தில் வழிபடும் காட்சி வைபவம் ந¬பெறும்.

Similar News