உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2022-04-07 10:44 IST   |   Update On 2022-04-07 10:44:00 IST
தவளக்குப்பத்தில் கணவன் மது குடித்து விட்டு வந்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

தவளகுப்பம்-அபிஷேகபாக்கம் மெயின் ரோடு வி.ஐ.பி. கார்டன் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தனியார் நிறுவனத்தில் ஓவியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயா (வயது 44) இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

பாஸ்கருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவ்வப்போது கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி சிறு சிறு பிரச்சனைகள ஏற்படும். ஆனாலும் கணவன்-மனைவிக் கிடையே சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். 

இந்த நிலையில் பாஸ்கர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது சமையல் சரியில்லை என்று பாஸ்கர் மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக் கிடையே பிரச்சினை எழுந்தது. 

இதையடுத்து பாஸ்கர் கழிவறைக்கு சென்று விட்டார். அப்போது ஜெயா திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலி தாங்காமல் ஜெயா அலறினார். இந்த அலறல் சத்தம் கேட்டு பாஸ்கர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து மனைவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். 

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஜெயா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஜெயாவின் சகோதரி மலர் கொடுத்த புகாரின் பேரில் தவளகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News