உள்ளூர் செய்திகள்
மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
திருக்கனூர் வாதானூர் மாரியம்மன் கோவில் தெரு அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.
போட்டியின் முடிவில் விழுப்புரம் வாதானூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான சிவசேகர் (வயது41). மற்றும் அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார், சரவணன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.
ஒரு கட்டத்தில் மது போதையில் அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த செல்வக்குமார், சரவணன் ஆகியோர் சிவசேகரை சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் சிவசேகர் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது-.
இதுகுறித்து சிவசேகர் திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.