உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பள்ளி மாணவன் மீது தாக்குதல்

Published On 2022-04-06 14:48 IST   |   Update On 2022-04-06 14:48:00 IST
தவறு செய்ததாக கூறி பள்ளி மாணவன் மீது தாக்குதல் கராத்தே மாஸ்டர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை தேங்காய்த்திட்டு தமிழ்கண்ணன், தா.ராம கிருஷ்ணன் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தேங்காய்த் திட்டு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த 14 வயது மாணவன் 9-ம் வகுப்பு படித்து  வருகிறான்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி சென்ற மாணவன் தவறு செய்ததாக கூறி அதே பள்ளியில் பணிபுரியும் கராத்தே மாஸ்டரான செல்வமணி கம்பால் மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த பள்ளி மாணவன் இதுகுறித்து தனது தாய் வேளாங்கண்ணியிடம் முறையிட்டான். 
இதுகுறித்து வேளாங்கண்ணி குழந்தைகள் நல வாரியத் திடமும், முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News