உள்ளூர் செய்திகள்
மரக்கன்று வழங்கல்.

கார் ஓட்டுனர்கள் சங்க தொடக்க விழா

Published On 2022-04-06 14:30 IST   |   Update On 2022-04-06 14:30:00 IST
சீர்காழியில் கார் ஓட்டுனர்கள் சங்க தொடக்க விழாவில் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.
சீர்காழி:

சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் வாடகை கார், ஓட்டுனர் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. தலைமை வகித்து சங்க பெயர் பலகை திறந்து வைத்து குத்து விளக் கேற்றினார்.

தொடர்ந்து பள்ளி மாணவ&மாணவிகளுக்கு டிபன் பாக்ஸ், ஜாமின்ட்டரி பாக்ஸ், பேனா உள்ளிட்ட பொருட்கள் வழங்கி சிறப்புறையாற்றினார்.

தொடர்ந்து வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பலன் தரும் மரக்கன்றுகள் வழங்கப் பட்டது.

விழாவில் நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, துணைத் தலைவர் சுப்பராயன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சந்திர மோகன், சங்க தலைவர் தினேஷ்குமார், செயலாளர் சந்திரமோகன், பொருளாளர் சதிஸ்பாபு பங்கேற்றனர்.

Similar News