உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே விவசாயியை அடித்துக்கொன்ற 3 பேர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே விவசாயியை அடித்துக்கொன்றது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கடுவனூரைசேர்ந்தவர் முனுசாமி. அவரது மகன் அரசு(வயது 40). பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர், வெங்கடேசன். இவர்கள் இருவருக்கும் இடையே இடம் பிரச்சினையால் முன்விரோதம் இருந்தது.
கடந்த 31-ந்தே தி அரசு குடும்பம் குறித்து வெங்கடேசன் குடும்பத்தினர் தரக்குறைவாகபேசினர். இதனைதட்டிக்கேட்ட அரசுவை , வெங்கடேசன், அவரது மனைவி அரசிளங்குமாரி, தாய் ராணி, மகள்கள் சவுந்தர்யா, கவுசல்யா, குமார் மனை விதங்கமணி, இவரது மகன் ஜெகதீஷ் ஆகியோர் தாக்கினர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார், வெங்கடேசன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிந்து, விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், தகராறில் படுகாயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரசு, நேற்று காலை இறந்தார். இதனால், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி , அரசிளங்குமாரி (40), ராணி(65), தங்கமணி(37) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, கடுவனூர் பகுதியில் பதற்றம் நிலவியதால் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பிரேத பரிசோதனை முடிந்து அரசுவின் உடல் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இருப்பினும் உடலை அடக்கம் செய்யாமல் 300-க்கும் மேற்பட்டோர், நேற்று திருவண்ணாமலை சங்கராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். தாசில்தார் பாண்டியன், டி.எஸ்.பி., மகேஷ், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கடுவனூரைசேர்ந்தவர் முனுசாமி. அவரது மகன் அரசு(வயது 40). பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர், வெங்கடேசன். இவர்கள் இருவருக்கும் இடையே இடம் பிரச்சினையால் முன்விரோதம் இருந்தது.
கடந்த 31-ந்தே தி அரசு குடும்பம் குறித்து வெங்கடேசன் குடும்பத்தினர் தரக்குறைவாகபேசினர். இதனைதட்டிக்கேட்ட அரசுவை , வெங்கடேசன், அவரது மனைவி அரசிளங்குமாரி, தாய் ராணி, மகள்கள் சவுந்தர்யா, கவுசல்யா, குமார் மனை விதங்கமணி, இவரது மகன் ஜெகதீஷ் ஆகியோர் தாக்கினர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார், வெங்கடேசன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிந்து, விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், தகராறில் படுகாயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரசு, நேற்று காலை இறந்தார். இதனால், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி , அரசிளங்குமாரி (40), ராணி(65), தங்கமணி(37) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, கடுவனூர் பகுதியில் பதற்றம் நிலவியதால் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பிரேத பரிசோதனை முடிந்து அரசுவின் உடல் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இருப்பினும் உடலை அடக்கம் செய்யாமல் 300-க்கும் மேற்பட்டோர், நேற்று திருவண்ணாமலை சங்கராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். தாசில்தார் பாண்டியன், டி.எஸ்.பி., மகேஷ், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டம் முடிவுக்கு வந்தது.