உள்ளூர் செய்திகள்
கணினி முகாம்

கணினி பட்டா திருத்த முகாம்

Published On 2022-04-05 16:21 IST   |   Update On 2022-04-05 16:21:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம் நாளை நடக்கிறது
சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை களில் நடைபெற உள்ளது. 

அதன் தொடர்ச்சியாக நாளை (6ந்தேதி) தேவகோட்டை வட்டத்தில் கிளாமலை குரூப் தேர்போகி கிராமம், மேலச்செம் பொன்மாரி மற்றும் உஞ்சனை கிராமங்களிலும், திருப்பத்தூர் வட்டத்தில் சுண்ணாம்பிருப்பு மற்றும் இளங்குடி கிராமங்களிலும், சிவகங்கை வட்டத்தில் ஆலங்குளம் மற்றும் கத்தப்பட்டு கிராமங்களிலும், இளையான்குடி வட்டத்தில் முள்ளியாரேந்தல் மற்றும் மேலப்பிடாரிச்சேரி கிராமங் களிலும், காளையார்கோவில் வட்டத்தில் தடியமங்கலம் கிராமத்திலும் கணினி பட்டா திருத்த முகாம்கள் நடைபெற உள்ளன.

பொதுமக்கள் மேற்கண்ட வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News