உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு அதிகாரி

Published On 2022-04-05 15:27 IST   |   Update On 2022-04-05 15:27:00 IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை கைது செய்ய வேண்டும் என கலெக்டரிடம் பெற்றோர் மனு அளித்தனர்.
நாகை நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் சாலை தர ஆய்வு  அதிகாரி சிவாஜிராஜா என்கிற சிவாஜி அங்குள்ள கோவிலின் பின்புறம் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து சிறுமி யின் பெற்றோர் வேதாரண் யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தனர். அதன்பேரில் போலீ சார் நாகை நெடுஞ்சாலை துறை அதிகாரி சிவாஜிராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இது வரை அவரை கைது செய்ய வில்லை.

இதனிடையே சிவாஜி ராஜாவுக்கு நெருங்கிய உறவி னர்கள் வழக்கை வாபஸ் வாங்க கூறி சிறுமியின் குடும் பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்துள் ளனர்.  இதனால் பயந்துபோன அவர்கள் நாகை மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித் தனர்.

அதில் வழக்கை வாபஸ் பெறக்கோரி எங்க ளுக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறது.  இதனால் நாங்கள் சொந்த கிராமத்திற்கு கூட செல்ல முடியவில்லை.உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Similar News