உள்ளூர் செய்திகள்
சாராயம் கடத்தி வந்தவர்களை கைது செய்த போலீசார்.

சாராயம் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

Published On 2022-04-05 15:15 IST   |   Update On 2022-04-05 15:15:00 IST
காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு காரில் சாராயம்& மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குத்தாலம்:

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலிருந்து மது பாட்டில்கள் கடத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் விற்பனை செய்வது தொடர் கதையாக இருந்து வருகிறது.

இந்நிலை யில், மயிலாடுதுறை மாவட் டத்தில் புதிய போலீஸ் சூப்பிரண்டாக என்.எஸ்.நிஷா நேற்று பொறுப்பேற் றார். வெளிமாநில மது கடத்தலை தடுக்க அவர் உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று இரவு பெரம்பூர் இன்ஸ்பெக்டர் (பொ) விசித்திராமேரி தலைமையில் சப்&இன்ஸ்பெக்டர் இளைராஜா மற்றும் போலீ சார் மங்கநல்லூர் கடைவீ தியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில் 800 லிட்டர் பாண்டிச்சாராயம், 480 குவார்ட்டர் மதுபாட் டில்கள் இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத் தலில் ஈடுபட்ட கார் டிரைவர் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடியை சேர்ந்த மணிகண்டன் (வயது 42), உதவியாக இருந்த பால முருகன் (46) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் சாராயம், மதுபாட்டில்கள் ஆகிய வற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின் றனர். மாவட்ட சூப்பிரண்டாக நிஷா பொறுப்பேற்ற முதல் நாளிலேயே மது கடத்தல் கும்பலை பிடித்ததால் இனி குற்ற செயல் குறையும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Similar News