உள்ளூர் செய்திகள்
சிலிண்டருக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி
வேதாரண்யத்தில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தி காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
நகரத்தலைவர் வைரம், மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் மகிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டர், மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்திகோஷம் எழுப்பினர்.
இதில் மாவட்டத் தலைவர் சத்தியகலா, நகராட்சி கவுன்சிலர் தங்கதுறை, ஐ.என்.டி.யூ.சி சங்கத்தைச் சேர்ந்த தங்கமணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு ரபிக் சோட்டாபாய் அப்சல் உசேன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெல்லி குமார், அர்ஜீனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யத்தில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
நகரத்தலைவர் வைரம், மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் மகிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டர், மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்திகோஷம் எழுப்பினர்.
இதில் மாவட்டத் தலைவர் சத்தியகலா, நகராட்சி கவுன்சிலர் தங்கதுறை, ஐ.என்.டி.யூ.சி சங்கத்தைச் சேர்ந்த தங்கமணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு ரபிக் சோட்டாபாய் அப்சல் உசேன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெல்லி குமார், அர்ஜீனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.