உள்ளூர் செய்திகள்
கருத்தரங்கம்

தொழில் முனையோர் கருத்தரங்கம்

Published On 2022-04-04 11:51 GMT   |   Update On 2022-04-04 11:51 GMT
இளையான்குடியில் தொழில் முனையோர் கருத்தரங்கம் நடந்தது.
மானாமதுரை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் சாகிர்உசேன் கல்லூரியில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்   சாகிர் உசேன் கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் இணைந்து  தொழில் முனைவோர் வியாபாரம் திறமை மற்றும் வளர்ச்சி குறித்த 5வது கருத்தரங்கை நடத்தியது. 

கல்லூரி  பொருளியல் துறை, உதவிப்பேராசிரியர்  மாரிமுத்து வரவேற்றார். வணிகவியல்துறை இணை பேராசிரியர்  பீர் இஸ்மாயில் மற்றும்  முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் பேசினர். 

தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர்  நாசர் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக கீழக்கரை, செய்யது ஹமீதியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறை தலைவர்  பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பேராசிரியர்கள், 70 மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கணித்துறை உதவி பேராசிரியர்  ஆரிப் ரஹ்மான் நன்றி கூறினார்.
Tags:    

Similar News