உள்ளூர் செய்திகள்
மஞ்சுவிரட்டு

மஞ்சுவிரட்டு

Published On 2022-04-04 17:11 IST   |   Update On 2022-04-04 17:11:00 IST
கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.
நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள குமாரளபேட்டை, என். வைரவன்பட்டி, ஆத்தங்குடி, சென்னல்குடிபட்டி, திருமுக்கனிபட்டி ஆகிய 5 ஊர் நாட்டார்கள் இணைந்து குமாரபேட்டை பூமலைச்சி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடத்தினர்.

நிகழ்ச்சியில் கோவிலில் இருந்து 5 ஊர் நாட்டார்கள் இணைந்து பட்டு எடுத்து வந்து தொழுவில் பங்கேற்ற 235 மாடுகளுக்கு வேட்டி, துண்டுகள் அணிவித்து மரியாதை செய்தனர்.

மாடுபிடி வீரர்களுக்கும் பங்கேற்ற காளைகளுக்கும் பரிசுகள் வழங்கினர். 40 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, கீழச்சிவல் பட்டி காவல்துறையினர், வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினர், கால்நடை துறையினர், சுகாதார துறையினர் பங்கேற்றனர்.

மஞ்சு விரட்டுக்கான ஏற்பாடுகளை 5 ஊர் நாட்டார்கள் செய்திருந்தனர். மஞ்சு விரட்டில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Similar News