உள்ளூர் செய்திகள்
ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவராக கண்ணகி தேர்வு

உளுந்தூர்பேட்டையில் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவராக கண்ணகி தேர்வு

Published On 2022-04-04 16:10 IST   |   Update On 2022-04-04 16:10:00 IST
உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 53 ஊராட்சிகள் உள்ளன. இதில் 40 ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

திருநாவலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.

மணி கண்ணன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். யூனியன் தலைவர் ராஜவேல், ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வைத்தியநாதன், நகராட்சி தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 53 ஊராட்சிகள் உள்ளன. இதில் 40 ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டமைப்பு தலைவராக ஊராட்சி மன்ற தலைவர் கண்ணகி ஜெயராமன் பிரசன்னா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக குஞ்சரம் ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி பாலாஜி , பொருளாளராக திருப்பேர் தக்கா மன்ற தலைவர் கருணாநிதி ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இதேபோல் துணைத்தலைவராக ஊராட்சி மன்ற தலைவர்கள் புகைப்பட்டி அங்கமுத்து, பெரும் குறுக்கை பாலகிருஷ்ணன், குன்னத்தூர் சிவா, துணை செயலாளராக பாலு ,வீரமங்கலம் நசீம், காத்து மலையனூர் ராமசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

செயற்குழு உறுப்பினராக மூலசமுத்திரம் மகாலட்சுமி, மழவராயனூர் சுபா, பின்னலவாடி மணி, எலவனாசூர்கோட்டை நந்தகுமார், பல்லவாடி கோவிந்தன், ஜெயந்தி, பாலி சவுந்திர பாண்டியன், தனம், அனிதா குமாரமங்கலம், அமுதா ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். நிர்வாகி களுக்கு மணிகண்ணன் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Similar News