உள்ளூர் செய்திகள்
மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி தொடக்கம்
செம்பனார்கோவிலில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி ஒன்றியக்குழு தலைவர் நந்தினி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான நிவேதா முருகன் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதில் சிலம்பம், இரட்டை சிலம்பம், குத்துவரிசை, வாள்வீச்சு, சுருள்வாள், மான்கொம்பு, கட்டைக்கால் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து 500&க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெறும் மாணவர்கள் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.
நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் ரவி, கலைமகள் கல்வி குழும தாளாளர் நெடுஞ்செழியன், மருத்துவர் வீரபாண்டியன், மற்றும் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி ஒன்றியக்குழு தலைவர் நந்தினி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான நிவேதா முருகன் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதில் சிலம்பம், இரட்டை சிலம்பம், குத்துவரிசை, வாள்வீச்சு, சுருள்வாள், மான்கொம்பு, கட்டைக்கால் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து 500&க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெறும் மாணவர்கள் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.
நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் ரவி, கலைமகள் கல்வி குழும தாளாளர் நெடுஞ்செழியன், மருத்துவர் வீரபாண்டியன், மற்றும் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.