உள்ளூர் செய்திகள்
அரசலாற்றில் மிதக்கும் மூதாட்டி பிணம்.

ஆற்றில் மிதந்த மூதாட்டி பிணம்

Published On 2022-04-04 15:23 IST   |   Update On 2022-04-04 15:23:00 IST
திருமருகல் அருகே அரசலாற்றில் மிதந்த மூதாட்டி பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பரமநல்லூர், அகலங்கன்
பாலம் இடையே அரசலாற்று படுகையில் புதுச்சேரி மாநிலம் எல்லை
அருகில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க நீலம் சிவப்பு நிறம் கலந்த புடவை மற்றும் ஆரஞ்சு நிற சட்டை அணிந்திருந்த மூதாட்டி
பிணம் கிடப்பதாக திருக்கண்ணபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் சப்&இன்ஸ்பெக்டர் இரணியன் மற்றும் போலீசார் சென்று திருமருகல் தீயணைப்பு துறையினர் உதவியுடன் பிணத்தை கைப்பற்றி
நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து
இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், கொலையா? என பல
கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News