உள்ளூர் செய்திகள்
வீதிஉலா நடந்தது.

யானை வாகனத்தில் அஞ்சு வட்டத்து அம்மன் வீதியுலா

Published On 2022-04-04 15:22 IST   |   Update On 2022-04-04 15:22:00 IST
கீழ்வேளூரில் உள்ள அஞ்சு வட்டத்து அம்மன் கோவிலில் வீதியுலா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுந்தரகுசாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி, அஞ்சுவட்டத்தம்மன் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 29-ம்தேதி காப்பு கட்டுதலுடன்
 துவங்கி வீதிஉலா நடைபெற்று வருகிறது.

முக்கிய நிகழ்ச்சியான யானை வாகனத்தில் அஞ்சுவட்டத்தம்மன்
சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா நடைபெற்றது.

முன்னதாக சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கிருபானந்த வாரியார் சுவாமிகளின் மாணவி
தேசமங்கைகரசி சொற்பொழிவு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Similar News