உள்ளூர் செய்திகள்
மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.

மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-04 15:08 IST   |   Update On 2022-04-04 15:08:00 IST
பாகூர் மின்துறை அலுவலகம் எதிரே மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி:

பெட்ரோல், டீசல் விலையேற்றம், மின்கட்டண உயர்வு, மின்துறை தனியார் மயமாக்குதல் உள்ளிட்டவைகளை கண்டித்து மார்க்சிஸ்டு  கம்யூனிஸ்டு கட்சியினர் பாகூர் மின்துறை அலுவலகம் எதிரே கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாகூர் கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை  தாங்கினார். கொம்யூன் குழு நிர்வாகிகள் கலைச்செல்வன், வடிவேலு, கலியன், மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கொம்யூன் குழு உறுப்பினர்கள் சேகர், அரிதாஸ், கவுசிகன், கிளை செய லாளர்கள் வெங்கடாசலம், வளர்மதி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சிவன் கோவில் அருகில் இருந்து டி.வி., மிக்சி மின்விசிறி உள்ளிட்டவற்றை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக புறப்பட்டு பாகூர் கடைவீதி வழியாக மின் துறை பொறியாளர் அலுவலகம் சென்றனர். 

அலுவலகம் எதிரே வீதியில் மின்சார பொருட் களை வைத்து மின் கட்டணம் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்பெற வலியுறுத்தியும், மின்துறையை தனியார் மயமாக்குதலை கைவிட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Similar News