உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பெண் மீது தாக்குதல்

Published On 2022-04-04 12:42 IST   |   Update On 2022-04-04 12:42:00 IST
வாணரப்பேட்டையில் தகாத வார்த்தையால் திட்டியதை தட்டிக்கேட்ட பெண்ணை தாக்கியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:

 புதுவை வாணரப்பேட்டை ராசுஉடையார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி சூர்யா(வயது31). இவர்களது  பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சார்லஸ் (43).  இவர்கள் 2 குடும்பத் தினருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. 
அவ்வப்போது அக்கம் பக்கத்தினர் இரு தரப்பினரையும் சமாதனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் சார்லஸ், சூர்யா வீட்டின் முன்பு நின்றுக் கொண்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனை சூர்யா தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திர மடைந்த சார்லஸ் அங்கு கிடந்த கல்லை எடுத்து சூர்யாவின் தலையில் தாக்கிவிட்டு ஓடி விட்டார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சூர்யா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 

பின்னர் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சார்லசை தேடி வருகிறார்கள்.

Similar News