உள்ளூர் செய்திகள்
ஓசூரில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெண்ணை வெட்டிய தனியார் நிறுவன அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
ஓசூர் சிப்காட் பேகேப்பள்ளியை சேர்ந்தவர் நாகரத்தினம்மா (வயது 41). இவரது வீட்டில் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள ஸ்ரீராமனூரை சேர்ந்த சசிக்குமார் (33) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். மேலும் சசிக்குமார் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சசிக்குமார் கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை காலி செய்தார். அப்போது அவர் முன்பணமாக கொடுத்த ரூ.2,500&ஐ திரும்ப கேட்டார். ஆனால் நாக ரத்தினம்மா அந்த தொகையை தர முடியாது என தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சசிக்குமார் அரிவா ளால் நாகரத்தினம்மாவை வெட்டினார். இதில் காயம் அடைந்த நாகரத்தினம்£ சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.