உள்ளூர் செய்திகள்
.

போச்சம்பள்ளி அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

Published On 2022-04-01 16:04 IST   |   Update On 2022-04-01 16:04:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள முல்கனூர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது50). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கு இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அடிக்கடி இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் 27ந்தேதி அன்று மீண்டும் இவர்களுக்குள் தகராறு நடந்தது. இதில் ஆத்திரமடைந்த முருகன், அதே பகுதியை சேர்ந்த லட்சுமணனுடன் சேர்ந்து வேலாயுதத்தை உலக்கையால் அடித்து தாக்கியுள்ளனர். 

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த வேலாயுதத்தை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக வேலாயுதம் உயிரிழந்தார்.

இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து முருகன், லட்சுமணன் ஆகியோரை கைது செய்தனர். கைதான அவர்களை கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News