உள்ளூர் செய்திகள்
.

கஞ்சா வைத்திருந்தவர் கைது

Published On 2022-04-01 16:04 IST   |   Update On 2022-04-01 16:04:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதியில் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட் டனர். 

அப்போது கீழ்மத்தூர் சுடுகாடு அருகே பனந்தோப்பு பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது25)  என்பவர் கஞ்சா விற்பனை செய்த தாக போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 540 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
 
கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

Similar News