உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் மதுவிற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் கொடமாண்டப்பட்டி பிரிவு சாலை பகுதியில் அனுமதியின்றி பதுக்கி வைத்து மதுவிற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அனுமதியின்றி மதுவிற்றதாக வள்ளியம்மா (வயது60) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.