உள்ளூர் செய்திகள்
சத்துணவு அமைப்பாளரை பாராட்டினர்

சத்துணவு அமைப்பாளர் சேவைக்கு பாராட்டு

Published On 2022-04-01 15:04 IST   |   Update On 2022-04-01 15:04:00 IST
மயிலாடுதுறையில் சத்துணவு அமைப்பாளர் சேவைக்கு ஒன்றிய ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை ஒன்றியம், மன்னிப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக முத்துலட்சுமி பணியாற்றி வந்தார். இவர் ஓய்வு பெற்றார். அவருக்கு மயிலாடுதுறை ஒன்றிய ஆணையர் அன்பரசன் 26 ஆண்டுகள் எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் சிறப்பாக தங்கள் சேவையை செயல் ஆற்றியுள்ளார்.

அவரது சேவைகளை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து கூறினர். ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் பன்னீர்செல்வம், சத்துணவு மேலாளர் வாணி உள்ளிட்ட சக ஊழியர்கள் வாழ்த்து கூறி பாராட்டினர்.

சத்துணவு அமைப்பாளர் முத்துலட்சுமி தனது சேவைக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி என கூறினார்.

Similar News