உள்ளூர் செய்திகள்
தனிநபராக கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது எடுத்த படம்.

சூளகிரியில் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தனிநபராக உண்ணாவிரத போராட்டம்

Published On 2022-04-01 10:38 IST   |   Update On 2022-04-01 10:38:00 IST
அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வான கே.பி.முனுசாமி இன்று காலை சூளகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு தனிநபராக ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் சூளகிரி அருகே உள்ள சிப்காட் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் சூளகிரி அருகே அய்யர்னபள்ளி, உத்தனப்பள்ளி, நாகமங்கலம் ஊராட்சிகளில் உள்ள சுமார் 5 ஆயிரம் விவசாய நிலங்களை கையகப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனால் தொழிற்சாலைகளுக்கு விவசாய நிலங்களை எடுப்பதால் அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வான கே.பி.முனுசாமி, சூளகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு தனிநபராக ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

கே.பி.முனுசாமி, தனி ஆளாக போராட்டத்தை தொடங்கியதால் அங்கு அ.தி.மு.க.வினர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அங்கு சூளகிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Similar News