உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஓசூர்,
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான, அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் நாளை (1-&ந்தேதி) நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
ஒசூர் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழிப்புணர்வு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
மேலும் இதில், ஆசிரியர் பயிற்றுநர்கள்,தலைமை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலமானது, காமராஜர் காலனியில் உள்ள ஆர்.வி.அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கி உழவர் சந்தை சாலை, தாலுகா அலுவலக சாலை, நேதாஜி சாலை, எம்ஜி சாலை வழியாக சென்று பின்னர், வட்டார வள மையத்தில் வட்டார வள மையத்தில் நிறைவு பெற்றது.