உள்ளூர் செய்திகள்
இலவச பஸ் பயணச்சலுகை அட்டைக்கான சிறப்பு முகாம்
சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசபஸ் பயணச்சலுகை அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் 2 நாட்கள் நடக்கிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல் படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யவும் பல்வேறு துறைகளுடன் ஒன்றிணைந்து பல நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறது.
அந்தவகையில் நாள்தோறும் பள்ளி, கல்லுரி, மருத்துவம் மற்றும் தொழில் சார்ந்த பணிகளுக்காக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு அந்த வழித்தடங்களுக்கான இலவச பஸ் பயண சலுகை அட்டை வழங்கிவருகிறது.
அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் பயணங்கள் மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பயணச்சலுகை அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் வருகிற 31ந்தேதி அன்று பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் மற்றும் 1ந்தேததி மற்ற வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் பஸ் பயணச்சலுகை அட்டை புதிதாகவும் மற்றும் பழைய அட்டையினை புதுப்பித்து வழங்கப்பட உள்ளது.
இந்த சிறப்புமுகாமில் மாற்றுத்திறனாளிகள் கீழ்கண்ட சான்றுகளுடன் கலந்து கொள்ள வேண்டும்.
தேவைப்படும் சான்றுகள் விவரம் வருமாறு:&
மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல் 1, பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் வாக்காளர் அட்டை நகல், பணிபுரியும் நிறுவன சான்று&கல்வி நிறுவனம் சான்று, சுயதொழில் சான்று, கடந்த நிதியாண்டு பெற்ற பஸ்பயணச்சலுகை அட்டை அசல்.
மேற்கண்ட சான்றுகளுடன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பாதுகாவலர்/பெற்றோர் மேற்காணும் நாட்களில் விண்ணப்பித்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.