உள்ளூர் செய்திகள்
.

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பேக்கரி தொழிலாளி சாவு

Published On 2022-03-30 15:30 IST   |   Update On 2022-03-30 15:30:00 IST
கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பேக்கரி தொழிலாளி பலியானார்.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி தாலுகா கங்கலேரி பகுதியை சேர்ந்தவர் அஸ்மத் (வயது45). இவர் காவேரிப்பட்டணம் பேக்கரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 

இந்த நிலையில் இவர் நேற்றுமுன்தினம் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது கங்கலேரி கூட்ரோடு அருகே வந்த போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் படுகாயம் அடைந்த அஸ்மத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அஸ்மத் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News