உள்ளூர் செய்திகள்
பணியாளர் தேர்வு வாரியம் அமைக்க வேண்டும்-பா.ம.க வலியுறுத்தல்
காலி பணியிடங்களை நிரப்ப பணியாளர் தேர்வு வாரியம் அமைக்க வேண்டும் என்று பா.ம.க வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ம.க அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் ஏறக்குறைய 10 ஆயிரம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அவற்றை நிரப்ப அரசு இதுவரை எந்தவித நடவடி க்கையும் எடுக்க வில்லை. சமீபத்தில் காவலர் பணிக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் மற்ற துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங் களை நிரப்புவதற்கு ஒரு நிரந்தர மான பணியாளர் தேர்வு வாரியத்தை உருவாக்கி அதன் மூலம் நேர்மையான முறையில் தேர்வுகளை நடத்தி காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.