உள்ளூர் செய்திகள்
கண்டியாநத்த கிராமத்தில் மீன்பிடி திருவிழா
கண்டியாநத்த கிராமத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா பங்குனி மாதம் சிறப்பாக நடைபெறும்.
நடப்பாண்டு வில்லியநத்தான் கண்மாய் மற்றும் ஓவியன் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. விவசாயம் செழிக்கவும், மழை பெய்ய வேண்டியும் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவை ஊர் முக்கியஸ்தர்கள் தொடங்கிவைத்தனர்.
இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று தூரி, கச்சா, ஊத்தா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன்வகைகளை பிடித்து மகிந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா பங்குனி மாதம் சிறப்பாக நடைபெறும்.
நடப்பாண்டு வில்லியநத்தான் கண்மாய் மற்றும் ஓவியன் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. விவசாயம் செழிக்கவும், மழை பெய்ய வேண்டியும் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவை ஊர் முக்கியஸ்தர்கள் தொடங்கிவைத்தனர்.
இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று தூரி, கச்சா, ஊத்தா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன்வகைகளை பிடித்து மகிந்தனர்.