உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
கிருஷ்ணகிரி சோக்காடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மேல்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 39).
இந்த நிலையில் நேற்று இவர் சோக்காடியில் இருந்து கொத்துபள்ளி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக முனியப்பன், மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டேம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.